பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய நிலையில் கடந்த (ஜனவரி 14) அன்று கிராண்ட் பினாலே நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கடைசி வரை அர்ச்சனா, மாயா, தினேஷ், விஷ்ணு, மணி ஆகியோர் இருந்த நிலையில் அர்ச்சனா இதன் டைட்டிலை வென்று அசத்தினார். இதன் மூலம் பிக் பாஸ் தமிழ் வரலாற்றில் கோப்பையை வென்ற முதல் வைல்ட் கார்டு போட்டியாளர் என்ற பெருமையை அர்ச்சனா பெற்றார்.
தற்போது அர்ச்சனா குறித்து ஓர் சர்ச்சை எழுந்து வருகிறது. அதாவது பிக் பாஸ் வீட்டில் கிடைத்த ரூ. 15 லட்சத்துக்கு 40 ஆயிரம் கிடைத்ததை அதை அப்படியே பி ஆர் ஏஜென்சிக்கு சம்பளமாக கொடுத்து விட்டதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றனர். மறுபக்கம் ஒரு பெண் பிக் பாஸ் டைட்டிலை வென்றிருக்கிறார் என பெருமை கொள்ளாமல் தற்போது வரை அவர் மீது பி.ஆர் என்ற குற்றச்சாட்டை வன்மத்துடன் கக்குகிறார்கள், என்று அர்ச்சனாவின் ஆதரவாளர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.