இளம் இந்திய அணியுடன் இணைந்த ரிஷப் பண்ட்…, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பிசிசிஐ!!

0
இளம் இந்திய அணியுடன் இணைந்த ரிஷப் பண்ட்..., அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பிசிசிஐ!!
இளம் இந்திய அணியுடன் இணைந்த ரிஷப் பண்ட்..., அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பிசிசிஐ!!

இளம் இந்திய வீரர்களுடன், காயத்தில் இருந்து மீண்டு வரும் ரிஷப் பண்ட் இணைந்துள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

ரிஷப் பண்ட்:

இந்திய அணியின் இளம் வீரரான ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு இறுதியில், பயங்கரமான கார் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்தார். இந்த விபத்துக்கு பின், பல்வேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொண்ட இவர், தற்போது உடல் நிலையில் முன்னேற்றம் கண்டு வருகிறார். இதனால், இவர் தற்போது மறுவாழ்வுக்காக தேசிய அகாடமியில் இணைந்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதன் மூலம், எதிர்வரும் 50 ஓவர் உலக கோப்பைக்குள் முழுவதுமாக உடல் தகுதி பெறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால், கிரிக்கெட் வாழ்க்கைக்கு திரும்ப இன்னும் பல நாட்கள் ஆகக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. அவ்வப்போது இவர், தான் சில பயிற்சியில் ஈடுபட்டு வருவதே தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், வெளியிட்டு ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி வருகிறார்.

IPL-லிருந்து விலகிய முன்னணி மும்பை இந்தியன்ஸ் நட்சத்திரம்…, அதிரடியாக மாற்று வீரர் அறிவிப்பு!!

இதற்கிடையில், இளம் இந்திய வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை இவரது தலைமையின் கீழ் பிசிசிஐ ஏற்பாடு செய்தது. இதில், 16 வயதுக்குட்பட்ட இந்திய வீரர்களுக்கு, வாழ்க்கை, கடின உழைப்பு உள்ளிட்ட பலவற்றை ரிஷப் பண்ட் எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சி குறித்த புகைப்படங்களை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here