சின்னத்திரை நடிகையான சித்ரா தற்கொலைக்கு பின் அவர் நடித்த அந்த முல்லை கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார்கள் என்ற கருத்து மக்கள் மத்தியில் பரவி வருகிறது. இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவு கதாபாத்திரத்தில் நடிக்கும் காவியா தான் முல்லையாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முல்லை
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாவர் சின்னத்திரை நடிகை சித்ரா. இவருக்கென்று ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் என்றே சொல்லலாம். ஏனெனில் அவர் முல்லை கதாபாத்திரத்தில் வாழ்ந்திருப்பார் என்றே சொல்லலாம். இப்படி இருக்க அவர் தற்கொலை செய்துகொண்டது பலரையும் பாதித்துள்ளது.
நாட்கள் செல்ல செல்ல சித்ராவின் தற்கொலை விஷயத்தில் பல மர்மங்கள் வெளியாகிக்கொண்டு தான் உள்ளது. சித்ரா நடிப்பது பிடிக்காததாலும், அவரை சந்தேகப்பட்டதாலும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் சித்ரா. இதனால் ஹேமந்த்தை அதிரடியாக கைதும் செய்தனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்கள் என பலரும் எதிர்பார்த்துள்ளனர். சித்ராவின் தீவிர ரசிகர்கள் முல்லை கதாபாத்திரத்தை கொன்றுவிடுமாறும் கதறி வருகின்றனர். ஆனால் முல்லை கதாபாத்திரத்தில் வேறு ஒரு ஆளை நியமித்து தானே ஆகவேண்டும்.
இந்நிலையில் சித்ராவின் நெருங்கிய தோழியான சரண்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அவர் தன்னால் நடிக்க முடியாது என்றே கூறிவிட்டார். இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதிக்கு தங்கையாக அறிவு கதாபாத்திரத்தில் நடிக்கும் காவ்யா இதில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவ்வாறு பல நடிகைகளின் பெயரும் வெளியானது.
ஆனால் அவர்களின் தரப்பில் இருந்து எந்த கருத்தும் இது வரை வெளியாகவில்லை. காவ்யாவிற்கு ஏற்கனவே ரசிகர்கள் அதிகமாக இருப்பதால் முல்லை கதாபாத்திரத்தில் ஏற்றுக்கொள்வார்களா ரசிகர்கள்?? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.