பாக்யலட்சுமி சீரியலில் பாக்கியா தனக்கு அடுத்தடுத்து என்ன பிரச்சனை வந்தாலும் சமாளித்து எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறார். ஒரு பக்கம் எழிலின் பிரச்சனை, இன்னொரு பக்கம் செழியன் பிரச்சனை. இதில் செழியன் பற்றி ஜெனிக்கு தெரிஞ்சு வீட்டில் பூகம்பம் வெடித்த நிலையில் அடுத்து கணேஷ் பற்றி எப்போது வீட்டுக்கு தெரியவரும் என பாக்கியா பயத்தில் உள்ளார்.
இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடில் பாக்கியா அமிர்தாவிடம் தனியாக அழைத்து நடந்த உண்மையை சொல்லுவாராம். மேலும் நீ என் பையன் கூட தான் வாழனும். உன்னை விட்டுட்டு நிச்சயம் அவ இருக்க மாட்டான் என்று சொல்லுவாராம். இதை கேட்டு அமிர்தா அதிர்ச்சியாவராம். பின் பாக்கியா கணேஷை பார்க்க அழைத்து செல்வாராம். அப்போது அமிர்தா கணேஷை பார்த்துவிட்டு இவன் யாருன்னே எனக்கு தெரியாது. இவை கணேஷே கிடையாது என்று சொல்லிவிடுவாராம்.