கொரோனா காலத்தில் எப்படி இருக்க வேண்டும்??? – கார்த்தி பட நடிகை வெளியிட்ட வீடியோ!!!

0

கொரோனா காலகட்டத்தில் நாம் தன்னம்பிக்கையுடன் இருக்கவேண்டும் என்று கார்த்தி பட நடிகை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

கார்த்தி பட நடிகை வெளியிட்ட வீடியோ:

கொரோனா முதல் அலையின் தாக்கம் நம்மைவிட்டு நீங்காத நிலையில்; தற்போது கடந்த சில மாதங்களாக கொரோனா 2ஆம் அலை நம்மை வாட்டிவதைக்கிறது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. நம் அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள்; பதட்டம் மற்றும் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றை உங்களில் நிறைய பேர் அதிகம் சந்தித்துள்ளீர்கள்.

கொரோனா 2ஆம் அலை அனைவரது வாழ்க்கையும் தலைக்கீழாக மாற்றியுள்ளது. ஒரு சிலர் தங்களது குடும்பங்களை இழந்து தவித்து வருகின்றனர். இவர்களுக்கு  ஆறுதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சினிமா நட்சத்திரங்கள் பலரும் மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம், மாஸ்க் அணியுங்கள், தடுப்பூசி போடுங்கள் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த வகையில் கார்த்தி பட நடிகை ராஷ்மிகா மந்தனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் ” இந்தப் போராட்டத்தில் ஜெயிக்க பாசிட்டிவாக இருங்கள்” என்றும்  ”நாம் யாரும் இதுபோன்ற ஒரு சூழ்நிலையை எதிர்பார்க்கவில்லை” என்றும் நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் இருங்கள் என்று தனது ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here