தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்து வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் ”தடையற தாக்க” திரைப்படத்தின் மூலமாகவே தமிழ் சினிமா துறையில் நுழைந்தார். இவர் தற்போது ஹிந்தி நடிகரான ஜாக்கி பாக்நானி என்பவரை காதலித்து வருகிறார். இந்நிலையில் இவர்களது திருமணம் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி கோவாவில் நடைபெற உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் திருமணத்திற்கு ரகுல் ப்ரீத் சிங் போட்ட கண்டிஷன்சை கீழ் காணலாம்.
அதாவது திருமணத்தின் போது பட்டாசு வெடித்தல் மற்றும் ஸ்னோ ஸ்ப்ரே போன்ற எந்த ஒரு நிகழ்வும் இருக்கக்கூடாது என்று கூறியிருக்கிறார். பட்டாசு வெடித்தால் காற்று மாசு மற்றும் நிலம் சேதம் அடையும் என்பதால் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இவர்களது திருமணத்திற்காக பத்திரிக்கை அடிக்காமல், இணையம் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.