இன்று வாக்கு செலுத்த வந்த “தல” அஜித்தை ரசிகர் ஒருவர் மிகவும் கோபப்படுத்தி உள்ளார். இதனால் நடிகர் அஜித் மிகவும் கோபம் அடைந்து அவரது மொபைலை பிடிங்கி உள்ளார். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
தமிழக சட்டமன்ற தேர்தல்
இன்று தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகின்றது. இந்த சட்டமன்ற தேர்தல் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. காரணம், இதில் வெற்றி அடையும் கட்சி தான் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் ஆட்சி அமைக்க உள்ளது. இதனால் மிகவும் முக்கியமாக பார்க்கப்படும் இந்த தேர்தலில் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
நாவூறும் சுவையுடன் “சிக்கன் கொத்சு” ரெசிபி – ட்ரை பண்ணி தான் பாருங்களேன்!!
இப்படியாக இருக்க, இன்று முக்கியமான பிரபலங்கள் அனைவரும் வாக்களித்து வருகின்றனர். சற்று வித்தியாசமாக நடிகர் விஜய் இன்று சைக்கிளில் சென்று தனது வாக்கினை செலுத்தி விட்டு வந்தார். அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இப்படியாக இருக்க, இன்று நடிகர் அஜித் வாக்கு செலுத்த சென்றுள்ளார். வாக்கு செலுத்தி விட்டு வந்த போது ஒரு ரசிகர் முகக்கவசம் கூட அணியாமல் வந்து செல்பி எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
சரி என்று, நடிகர் அஜித்தும் போஸ் கொடுத்துள்ளார். ஆனால், அந்த ரசிகரோ மொபைலை அப்படியே வைத்துள்ளார். பொறுமையுடன் இருந்து வந்த நடிகர் அஜித் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் அவரிடம் இருந்து மொபைலை பிடிங்கி அவரிடம் கொடுத்து விட்டு கோபமாக சென்று விட்டாராம். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகின்றது.