ஜனார்தனனுக்கு காலில் அடிபட்டதால் சூப்பர் மார்க்கெட்டுக்கு வேலைக்கு செல்லும் மீனா – கோவத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜனார்தனனின் காலில் அடிப்பட்டதை அடுத்து மீனா சூப்பர் மார்கெட்டிற்கு வேலைக்கு செல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தொடர்ந்து பல விறுவிறுப்பான சம்பவங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தற்போது ஜனார்தனனுக்கு காலில் அடிபட்டிருந்ததை அடுத்து மீனாவிற்கு கால் செய்து ஜீவாவை அனுப்பி வைக்க சொல்கிறார்.

மீனா ஜீவாவிடம் அங்கு போக சொல்லி கெஞ்சுகிறார். ஆனால் ஜீவா அங்கு செல்ல மறுக்கிறார். கடைசியில் வீட்டில் வந்து மூர்த்தியிடம் வந்து சொல்கிறார். வீட்டில் உள்ள அனைவரும் கோவமாகின்றனர். ஜீவாவை நம்பி தான் உங்க வீட்டில் சூப்பர் மார்க்கெட் ஆரம்பித்தார்களா?? என்று சொல்கின்றனர்.

கடைசியில் மீனா தான் அங்கு செல்வதாக சொல்கிறார். இதனால் குடும்பமே அதிர்ச்சியாகிறது. தன் அப்பாவிற்கு தான் மட்டும் தான் இருப்பதாகவும் எனவே தான் செல்வதாகவும் சொல்கிறார். அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர்.

அடுத்ததாக மீனா கிளம்பி செல்ல தனமும் முல்லையும் பேசிக்கொண்டுள்ளனர். கதிர் படிப்பை பற்றி பேசிக்கொண்டுள்ளனர். அப்பொழுது குழந்தை அழுக தனம் சென்று விடுகிறார். அப்பொழுது கதிருக்கு கால் செய்து வீட்டிற்கு வரும்படி கூறுகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here