தொடர்ந்து சக்தி பின்னால் சுற்றும் தருண் – ஸ்ருதிக்கு உண்மை தெரிந்தால் நடக்க போகும் விபரீதம் என்ன??

0

பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் சீரியலில் தொடர்ந்து பல ட்விஸ்டுகளுடன் ஓடிக்கொண்டுள்ளது. மேலும் ஷீலா மல்லிகாவிடம் குடும்பத்தை பற்றி விசாரிக்கிறார்.

மௌனராகம்

மௌனராகம் சீரியலில் தருண் தொடர்ந்து சக்தியுடன் நெருக்கமாக பழகி வருகிறார். ஸ்ருதி வேறு தருண் பிறந்த நாளுக்கு தனது காதலை சொல்ல போகிறார். இந்நிலையில் தருண் சக்தியை காதலித்து வருகிறார். இன்றைய எபிசோடில் சக்தி வேலைக்கு கிளம்ப மல்லிகை தருணிடம் காரில் செல்ல கூடாது என்று கூறுகிறார். சரி என்று கூறி செல்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அடுத்து சக்தி ரோட்டில் நடந்துகொண்டுள்ளார். அப்பொழுது தருண் சக்திக்காக காரில் காத்துக்கொண்டுள்ளார். சக்தி அவரை பார்த்து அதிர்ச்சியாகிறார். காரில் வர மாட்டேன் என்று அடம் பிடிக்க வற்புறுத்தி அழைத்து செல்கிறார். அம்மா பேச்சை மீறி இப்படி ஆகிடுச்சே என்று வருத்தப்படுகிறார்.

அடுத்து தருணின் அத்தை ஷீலா மல்லிகாவின் வீட்டிற்கு வருகிறார். மல்லிகாவின் குடும்பத்தை பற்றி கேட்கிறார். எல்லாரும் ஊரில் இருப்பதாக பொய் சொல்கிறார். அடுத்து ஷீலா தருணுக்கு அம்மா இல்லாததை பற்றி சொல்ல மல்லிகாவிற்கு அதிர்ச்சியாகிறது. அடுத்ததாக தருணிடம் ஏதோதோ பொய் சொல்லி பாதியிலேயே இறங்கி விடுகிறார்.

அடுத்து கார்த்திக் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கிறார். அப்பொழுது பார்த்து எவனோ ஒருவன் வாசிக்கிறான் என்ற படம் ஓட கார்த்திக்கிற்கு மல்லிகாவின் நியாபகம் வருகிறது. அப்படியே உட்காந்து விடுகிறார். மெய்மறந்து போன கார்த்தியை காதம்பரி தட்டி கூப்பிடுகிறார்.

சொல்லு மல்லிகா என்று சொல்ல வீடே ஷாக்காகிறது. காதம்பரி ஏன் இப்படி பண்றீங்க என்று சொல்லி அழுகிறார். எதோ தெரியாமல் கூப்பிட்டுட்டேன் என்று சமாளிக்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here