மத்திய அரசு வழங்கியுள்ள ஆதார் கார்டு தகவல்களை திருட சீனாவை சேர்ந்த ஹேக்கர்கள் முயற்சி செய்து வருவதாக தகவல் வந்துள்ளது.
ஆதார் தகவல்கள் திருட்டு:
மத்திய அரசு வழங்கி வரக்கூடிய ஆதார் கார்டு ஒரு தனிமனிதரின் ஒட்டுமொத்த அடையாளமாக பார்க்கப்படுகிறது. இதில், கைவிரல் ரேகை, கண் இமை அடையாளம் உள்ளிட்ட ஒரு நபரின் அனைத்தும் உள்ளடங்கியுள்ளது. இந்த ஆதார் கார்டு அனைவருக்கும் முக்கியம், இது இல்லாமல் அரசின் எந்த ஒரு நலத்திட்டத்தையும் பெற முடியாது எனும் நிலை உருவாகி உள்ளது.
இத்தனை முக்கியத்துவங்கள் பெற்ற ஆதார் கார்டை சீனாவை சேர்ந்த ஹேக்கர்கள் திருட முயற்சி செய்து வருவதாக அண்மையில் தகவல் வந்தது. ஆனால், அதை மறுத்துள்ள மத்திய அரசு இந்த ஆதார் கார்டு பற்றிய தகவல்கள் அனைத்தும் மத்திய அரசின் தீவிர பாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பதால், அது திருடு போவதற்கு வாய்ப்பே இல்லை என உறுதியளித்துள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்