கொரோனா பரவல் சற்று குறைய தொடங்கியதை அடுத்து இமாச்சலப் பிரதேச அரசு சுற்றுலா தளங்களுக்கு மக்களை சில நிபந்தனைகளுடன் அனுமதித்தது.இந்நிலையில் சிம்லாவிற்கு செல்ல, இமாச்சலப் பிரதேசத்தின் நுழைவு இடமான சோழன் மாவட்டத்தின் பர்வானூ அருகே ஞாயிற்றுக்கிழமை நீண்ட வரிசையில் கார்கள் அணிவகுத்து நின்றனர்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தின் நுழைவு இடமான சோழன் மாவட்டத்தின் பர்வானூ அருகே நேற்று கார்கள் நீண்ட வரிசையில் காணப்பட்டன. இதனால் அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பிற மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகளுக்காக இமாச்சலப் பிரதேசத்தில் எல்லைகள் திறக்கப்பட்டுள்ளது.
மேலும் அங்கு செல்ல ஆர்டி-பி.சி.ஆர் சோதனை அறிக்கை தேவை இல்லை என அறிவித்தைதை அடுத்து கடந்த 36 மணி நேரத்தில், ஷோகி வழியாக சுமார் 5,000 வாகனங்கள் தலைநகர் சிம்லாவுக்கு நுழைந்தன. ஆனால் அதற்கு கொரோனா இ-பாஸ் தேவைப்படுகிறது.மேலும் ,சிம்லா காவல்துறையினர் சுற்றுலாப் பயணிகளை முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை வலியுறுத்தி உள்ளனர். இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
Hundreds of cars line-up to enter Himachal Pradesh as the state allows travel without RT-PCR test#HimachalPradesh #Traffic pic.twitter.com/5uTO0rTfR6
— Times Drive (@TNTimesDrive) June 14, 2021
நாடு முழுவதும் உள்ள கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து இமாச்சல அரசாங்கம் ஊரடங்கில் தளர்வு அறிவித்துள்ளது. இருப்பினும் மாலை 5 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சில கட்டுப்பாடுகளுடன் உள்ளது.மேலும் இமாச்சல பிரதேசத்தில் நேற்று மட்டும் 370 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது மற்றும் 17 இறப்புகள் பதிவாகியுள்ளன.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்