தற்போது தமிழ் நாட்டில் கோவிட்-19 தடுப்பூசிக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கொரோனா தொற்று மக்களிடையே வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. அதோடு மிகவும் கடுமையான விளைவுகளையும் ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தற்போது உருமாற்றமடைந்து பரவும் கொரோனாவால் ஏராளமான மக்கள் மரணமடைந்துள்ளன. இந்த கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதை தொடர்ந்து பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆனால் தற்போது இந்தியாவில் பல மாநிலங்களில் பல இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருகிறது. தற்போது வரை மத்திய அரசிடம், 1.01 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் பெறப்பட்டு, 98 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. தற்போது, தமிழக அரசிடம், 50 ஆயிரத்துக்கும் குறைவாகவே தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. எனவே பெரும்பாலான மையங்களில் தடுப்பூசி வழங்குவதை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் மத்திய அரசிடமிருந்து தடுப்பூசிகள் வரும், 9-ஆம் தேதிதான் வர உள்ளது. அந்த தடுப்பூசிகளை விரைந்து தர மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!