ஆறு வருடம் கழித்தும் வைரலாகும் பிரேமம் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்

0

மக்கள் மனதை கொள்ளைகொண்ட திரைப்படம் தான் பிரேமம். 2015ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை குறித்த ரசிகர் ஒருவரின் கேள்விக்கு இயக்குனர் பதில் அளித்தது நெகிழ வைத்துள்ளது.

பிரேமம்:

மலையாளத்தில் எடுக்கப்பட்ட இளைஞர்களை கவர்ந்த திரைப்படம் பிரேமம். நிவின் பாலி, மடோனா செபாஸ்டியன், சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கொள்ளை கொண்டது. இதில் சாய்பல்லவி மலர் டீச்சராக வாழ்ந்து வந்தார்.

இதுகுறித்து ரசிகர் ஒருவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார். சாய்பல்லவிக்கு உண்மையில் பழைய விஷயங்கள் மறந்துவிட்டனவா? அல்லது வேண்டுமென்றே ஜார்ஜைப் புறக்கணிக்கிறாரா? அல்லது நினைவுகளை மீண்டும் பெற்று, ஜார்ஜுக்குத் திருமணம் ஆகிறது என்பதால் எதையும் சொல்லாமல் இருக்கிறாரா?  என்று அல்போன்ஸ் புத்திரனிடம் கேள்வி எழுப்பினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

‘அவளுக்கு அனைத்தும் மறந்துவிட்டது. அவளுக்கு மீண்டும் ஞாபகம் வந்தபோது அவள் அறிவழகனிடம் பேசியிருக்கலாம். அங்கு செல்லும்போது ஜார்ஜ், செலினோடு மகிழ்ச்சியாக இருப்பதை உணர்கிறாள். ஆனால், அவளுக்கு நினைவு திரும்பியிருப்பது ஜார்ஜுக்குத் தெரியும். இதை வசனங்களில் நாங்கள் சொல்லவில்லை. சைகையிலும், இசையிலும் காட்டியிருப்போம். உங்கள் சந்தேகம் தீர்ந்திருக்கும் என்று நம்புகிறேன். நீங்கள் சொன்னதுபோல அவளுக்குச் சமீபத்தில் நினைவு திரும்பிவிட்டது, ஆனால், ஜார்ஜுக்குத் திருமணம் என்பதால் அவள் அதைச் சொல்லவில்லை என்பதே சரி’ எனவும் ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார் இயக்குனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here