மத்திய அரசு ஊழியர்களுக்கு, 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 8 வது ஊதியக்குழு அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வட்டாரங்களில் பேசி வருகின்றனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ முடிவுகள் இதுவரை வெளிவராவிட்டாலும், மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு கண்டிப்பாக தெரியும் என தகவல் தெரிவித்துள்ளனர்.
![](https://enewz.in/wp-content/uploads/2024/05/Pic-2-1-1.jpg)
அப்படி அறிவிக்கும் பட்சத்தில் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.18,000லிருந்து ரூ.26,000ஆக உயர்த்தப்படலாம் என தெரிவித்துள்ளனர். இதனால் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.