தமிழகத்தில் மின் நுகர்வோர்களுக்கு தடையில்லாத மின்சாரம் வழங்க பல்வேறு நடவடிக்கைகளை TANGEDCO மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இன்ட்ராநெட் மூலம் பதிவு செய்யப்படும், மின்சாரம் தொடர்பான புகார்களை உரிய நேரத்தில் சரி செய்வதில் தாமதம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர் .இதையடுத்து பல கட்ட சோதனைக்கு பிறகு, FSMAPP எனும் மொபைல் ஆப்-ஐ TANGEDCO நிறுவனம் உருவாக்கி உள்ளது.
மக்களே உஷார்.. இன்றும், நாளையும் வெயில் சுட்டெரிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!!
இதன்மூலம் துணை பொறியாளர்கள் புகாரை பதிவு செய்து, கள ஆய்வின் போதே நுகர்வோர்களுக்கு தீர்வு காணப்படும் என கூறப்படுகிறது. இந்த புதிய ஆப், மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்ட பிறகு, ஒவ்வொரு மின்வாரிய மண்டலமாக படிப்படியாக அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.