நாடு முழுவதும் மக்களவை தேர்தல் விரைவில் வர இருப்பதால், நேற்று முன்தினம் (பிப்.19) தமிழகத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து நேற்று (பிப்.20) வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று (பிப்.21) சட்டப்பேரவையில் நடைபெற்றது.
PM கிசான் திட்ட விவசாயிகளே.., இனி 2000 ரூபாய் கிடைக்காது.., வெளியான ஷாக்கிங் நியூஸ்!!!
அப்போது பேசிய செல்லூர் ராஜு, “பட்ஜெட்டில் மதுரை மாவட்ட மக்களுக்கு எந்தவித அறிவிப்பும் இல்லை.” என வருத்தம் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, “நிதிநிலை அறிக்கையில் மதுரை மாவட்டத்திற்கு மெட்ரோ ரயில், தடையற்ற குடிநீர், மாணவர் விடுதி, திறன் மேம்பாட்டு மையம் என 20 அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது.” என கூறியுள்ளார்.