தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த்-க்கு, கடந்த சில காலங்களாக உடல்நிலை பாதிப்பால் அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அண்மையில் உடல்நிலை மிகவும் மோசமாகியதால், 14 நாட்களுக்கு சிகிச்சை அவசியம் என மருத்துவர்கள் கூறியிருந்தனர். இதையடுத்து ரசிகர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் விஜயகாந்த்-ன் உடல்நிலை சரியாகி திரும்ப வேண்டும் என கோவில்களில் வழிபாடு மேற்கொண்டிருந்தனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதன்படி உடல்நிலை சரியாகி வீடு திரும்பியவர், தற்போது மீண்டும் மருத்துவமனைக்கு சென்றது பலர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தே.மு.தி.க. கூறுகையில், வழக்கமான பரிசோதனைக்காக 15 நாட்களுக்கு பிறகு மருத்துவமனைக்கு வந்ததாக தெரிவித்துள்ளனர். இதனால் தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் ஆறுதல் அடைந்துள்ளனர்.
மக்களே உஷார்.., நாளை இங்கெல்லாம் மின்தடை.., மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!!!