தமிழகத்தில் இருந்து வேலைவாய்ப்பிற்காக பெரும்பாலானோர் அயல்நாடுகளுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். ஆனாலும் இவர்கள் செல்லும் நாடுகளின் கலாச்சாரம், மொழி, வேலை போன்றவை தொடர்பான குறைந்தபட்ச முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியமாக கருதப்படுகிறது. இது போன்ற பயிற்சிக்கு சென்னை உள்ளிட்ட இடங்களில் மட்டுமே இருப்பதால் பலரும் சிரமப்படுகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு “முன் பயண புத்தாக்கப் பயிற்சி” மையத்தை சென்னையை தொடர்ந்து விழுப்புரம், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய ஏழு மாவட்டங்களிலும் அமைக்க உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்காக ரூ.54,75,000/- (ரூபாய் ஐம்பத்து நான்கு இலட்சத்து எழுபத்து ஐந்தாயிரம்) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாணையும் வெளியிட்டுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
ISL 2023: ஒரு கோலால் தலைகீழாக மாறிய போட்டி…, திரில் வெற்றி பெற்ற கேரளா!!