பாக்கியலட்சுமி சீரியலில் பழனிச்சாமி எப்படியாவது பாக்யாவுக்கு கவர்மெண்ட் ஆர்டரை வாங்கி கொடுக்க வேண்டும் என பல்வேறு முயற்சிகளை எடுக்கிறார். நேற்றைய எபிசோடில் கூட பழனிசாமி பாக்கியா இருவரும் அதற்கான வேலையை செய்கின்றன. இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் பாக்கியா தனக்கு கவர்மெண்ட் ஆர்டர் கிடைத்து விட்டதாக எழில், அமிர்தா, செல்வியிடம் சொல்லி சந்தோஷப்படுகிறார்.
Enewz Tamil WhatsApp Channel
மேலும் இந்த ஆர்டர் கிடைக்க வேண்டும் என அவ்வளவு ஆசைப்பட்டேன். பல கஷ்டங்களை தாண்டி கிடைத்துவிட்டது என்கிறார். இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ராதிகா கிச்சனுக்கு வருகிறார். அப்போது செல்வி அவரை குத்திக் காட்டும் விதமாக இனிமேல் யார் தொல்லையும் இல்லாமல் நம்ம நிம்மதியா வேலை பார்க்கலாம் என்று சொல்கிறார். அந்த நேரத்தில் ராதிகா பாக்யாவுக்கு கை கொடுத்து “All The Best”என்கிறார். இதை பார்த்து பாக்கியா சந்தோஷப்பட செல்வி அதிர்ச்சியாகிறார். நிச்சயம் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தால் இனி கோபியின் பாடு என்னாகும் என்பதுதான் கதையின் அடுத்த திருப்பமாக உள்ளது.
ஐயோ அத்த.., இவ பார்லர வித்துட்டா.., உண்மையை உடைத்த மீனா.., ரோகிணிக்கு ஆப்பு வைக்கும் விஜயா!!!