![குணசேகரன் பித்தலாட்டத்தை கண்டுபிடிக்கும் SKR.., ஜீவானந்தம் போடும் மாஸ்டர் பிளான்.., எதிர் நீச்சல் ப்ரோமோ!!! குணசேகரன் பித்தலாட்டத்தை கண்டுபிடிக்கும் SKR.., ஜீவானந்தம் போடும் மாஸ்டர் பிளான்.., எதிர் நீச்சல் ப்ரோமோ!!!](https://enewz.in/wp-content/uploads/2023/11/feture-j-696x459.jpg)
எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தா இருக்காரா?? இல்லையா?? என்பது மிகப்பெரிய மர்மமாகவே உள்ளது. இன்னொரு பக்கம் குணசேகரின் ஆட்டம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே உள்ளது. இதனால் ஜனனி எப்படியாவது குணசேகரன் ஆட்டத்தை அடக்க வேண்டும் என நினைக்கிறார். இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் குணசேகரன் SKR எல்லோரும் தேர்தல் பற்றி சங்கத்தில் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது SKR அப்பத்தாவை கொன்னது யாருன்னு எங்களுக்கு தெரியும் என்று சொல்ல குணசேகரன் கதிர் இருவரும் அதிர்ச்சியாகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
இன்னொரு பக்கம் ஈஸ்வரி காலேஜிற்கு செல்ல அங்கு வேலை பார்க்கும் ப்ரொபசர் ஜீவானந்தம் தான் உங்களுக்கு இந்த வேலையை கொடுக்கும்படி சொன்னார் என்கிறார். இதை கேட்டு ஈஸ்வரி அழுகிறார். பின் சக்தி, ஜனனி இருவரும் ஜீவானந்தத்தை வெளியே எடுக்க வக்கீலை பார்த்து பேசுகின்றனர். அப்போது வக்கீல் அதற்கெல்லாம் அவசியமே இல்லை என்று சொல்ல இருவரும் வியப்படைகின்றனர். இதை வைத்து பார்க்கும் போது நிச்சயம் ஜீவானந்தம் அடுத்து ஏதோ மாஸ்டர் பிளான் போடுகிறார் என்று தான் தெரிகிறது.