நாடு முழுவதும் 2023-2024 ஆம் கல்வி ஆண்டானது தற்போது அரையாண்டு தேர்வை எதிர்நோக்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையின்படி பள்ளி செயல்படும் நேரத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக உத்தரபிரதேச மாநிலத்தின் பள்ளிக் கல்வித் துறையிடம் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, திங்கள் முதல் வெள்ளி வரை ஒவ்வொரு நாளும் சுமார் 5 முதல் 5.5 மணி நேரம் வரை மட்டுமே வகுப்புகளில் கற்பிக்கப்படும். மாதத்தில் 2 சனிக்கிழமைகளில் 2 முதல் 2.5 மணி நேரம் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும். மற்ற சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படும். ஒரு பாடவேலையானது சுமார் 35 முதல் 50 நிமிடங்கள் இருக்கக்கூடும். இதில் குறிப்பாக, வருடத்தில் 10 நாட்கள் புத்தகப் பை ஏதுமின்றி பள்ளிகளுக்கு மாணவர்கள் வர அனுமதி செயல்படும். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அம்மாநில அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.