தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு போட்டி, உதவித்தொகை மட்டுமல்லாமல் அரசு துறைகளில் இட ஒதுக்கீடுகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரிய கூட்டம் நடைபெற்றது.
Enewz Tamil WhatsApp Channel
அதில் அரசு துறைகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான காலி பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச கட்டாயக்கல்வி வழங்க சிறப்பு பள்ளிகள் செயல்படுவதாகவும், ஒரு மாற்றுத்திறனாளி கூட மன வருத்தம் அடைந்து விடக்கூடாது என்பதில் அரசு கவனமுடன் இருப்பதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.