தமிழகத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள் போன்றவற்றின் பெயர் பலகைகளில் தமிழ் எழுத்துக்களும் இடம் பெற்றிருக்க வேண்டும் என முந்தைய காலகட்டத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் பல கடைகளிலும், இந்த உத்தரவு பின்பற்றப்படுவதில்லை. இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ரமேஷ் மற்றும் ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், “தமிழில் பெயர் பலகை வைக்காத கடை, வணிக நிறுவனம் உள்ளிட்டவைகளுக்கு முந்தைய அறிவிப்பின் படி ரூ.50 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனை ரூ.2,000 அபராதமாக மாற்றிய அரசாணை இன்னும் ஓரிரு நாட்களில் அமலுக்கு கொண்டு வரப்படும்.” என தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இதுவரை அபராத தொகை வசூல் செய்தது குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.
அரசு ஊழியர்களே…, 50% வரை உயரும் அகவிலைப்படி?? வெளியான மாஸ் புள்ளி விவரம் இதோ!!