தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் கடைசி வாரம் முதல் கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக ஜூன் 7ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்க உள்ளதாக கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி பள்ளிகள் திறக்க சில தினங்களே இருப்பதால் முதன்மை கல்வி அதிகாரி முருகன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தை தூய்மை செய்து தயார் நிலையில் வைத்துக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்டவை உரிய முறையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பெரிய அளவில் சீரமைப்பு பணி இருக்கும் பட்சத்தில் மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெளுத்து வாங்க இருக்கும் மழை…, மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை!!
பள்ளி வகுப்பறை சீரமைப்பு பணிக்கு தேவையான உபகரணங்களை தமிழ்நாடு அரசின் நமக்கு நாமே திட்ட பங்களிப்பு நிதியை பயன்படுத்தி கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார்.