சமீப காலமாக நாட்டின் பல்வேறு முக்கிய பகுதிகளிலும் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால் மக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவே பயப்பட்டனர். அக்னி நட்சத்திரம் காரணமாக தமிழ்நாட்டில் தற்போது வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்படுகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
சொல்லப்போனால் தமிழகத்தில் நாள்தோறும் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி வருகிறது. அந்த அளவுக்கு வெப்பம் வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் இந்திய வானிலை மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கும்.
மேலும் வெப்பத்தின் அலை குறைய தொடங்குவதால், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, சத்தீஸ்கரில் ஆலங்கட்டி மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அப்பகுதியில் ஆரஞ்சு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மலைப் பகுதியை ஒட்டிய 6 மாநிலங்களில் அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும், அந்த மான் பகுதியிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.