தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பட்ஜெட் கூட்டுத்தொடர் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் அரசு ஊழியர்கள். பள்ளி மாணவர்கள், விவசாயிகள், ஏழை எளியவர்கள் பயன்பெறும் வகையில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அந்த திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
நேற்று கூட அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் நேற்று அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில் இதுவரை அரசு ஊழியர்களுக்கு வீடுகட்டுவதற்கான முன் பணம் 40 லட்சம் வழங்கப்பட்டு வந்தது.
சுற்றுலா பயணிகளே.., இனி எந்த பிரச்சனையும் இல்லாமல் இதை செய்யலாம்.., வெளியான அறிவிப்பு!!
ஆனால் இனி 40 லட்சத்தில் இருந்து 50 லட்சமாக வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.மேலும் பட்ஜெட்டில் வெளியான இந்த அறிவிப்பு இந்த ஆண்டே நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.