தமிழகத்தில் கோடைகால வெயிலை விட தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் பணிக்கு செல்லும் மக்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்லும் மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் வெயிலின் சூட்டை தணிக்க மக்கள் தண்ணீர் நிலையங்களை தேடி அலைகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த வகையில் மக்கள் அதிகம் சொல்லும் சுருளி அருவியில் குளிக்க தடை விதித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் குளிக்க அனுமதி வழங்கி இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சமீபத்தில் தேனி மாவட்டத்தில் கம்பம் அருகே இருக்கும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான சுருளி அருவியில் குளிக்க சென்ற ஒரு பெண் குழந்தை தலை மீது மரக்கிளை விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
கிரெடிட் கார்டு பயனாளர்களே., இந்த இடத்தில் Use பண்ணா 20% Tax?? மத்திய அரசு அதிரடி!!!
இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை என்று வனத்துறையினர் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்லும் சாலையில் உள்ள மரங்களின் காய்ந்த கிளைகளை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்தனர். இந்நிலையில், இன்று முதல் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளித்து கண்காணிப்பு செய்து வருகின்றனர்.