கொரோனா வைரஸ் தொற்றுக்கு 2 ரூபாய் மதிப்பிலான பீட்டா பிளாக்கர்ஸ் மாத்திரைகளை நல்ல பலன் தருவதாக தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவரின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
பீட்டா பிளாக்கர்ஸ் மாத்திரை..!
கொரோனா வைரஸ் பரவல் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் இன்னும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்காத நிலையில் தற்போது வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்தந்த நாட்டு மருத்துவர்கள் நிர்ணயித்த மருந்துகள் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பீட்டா பிளாக்கர்ஸ்மாத்திரைகள் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த மருத்துவரும் ஆராய்ச்சியாளருமான வசந்த குமார் கொரோனா வைரஸை அழிக்கும் மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் 50 ஆண்டுகால பழமை வாய்ந்த மாத்திரையான பீட்டா பிளாக்கர்ஸ் மாத்திரைகள் கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு நல்ல பலனை தருவதாக ஆராய்ச்சி முடிவை வெளியிட்டு உள்ளார்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களுக்கு பீட்டா பிளாக்கர்ஸ் மாத்திரைகள் வழங்கப்பட்டதாகவும் அது நல்ல பலன் தந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ரத்த அழுத்தத்தை குறைக்க இந்த மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டது என மருத்துவர் வசந்த குமார் தெரிவித்துள்ளார்.