மத்திய அரசு ஊழியர்களுக்கு, வருகிற மார்ச் மாதம் முதல் 7வது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில், அகவிலைப்படி உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உயரும் சம்பளம்:
மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆண்டுக்கு 2 முறை விலைவாசி உயர்வை பொறுத்து அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த தீபாவளி பண்டிகையின் போது, 4% அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டது. இதனால் இவர்களுக்கான அகவிலைப்படி, 34% லிருந்து 38 சதவீதமாக அதிகரித்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனால் பல லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைந்தனர். இதனைத் தொடர்ந்து, தங்களுக்கான அடுத்த அகவிலைப்படி ஊதிய உயர்வு எப்போது வரும்? என அனைத்து ஊழியர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் இவர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக மார்ச் மாத தொடக்கத்தில், 7வது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் இவர்களுக்கான அகவிலைப்படி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிட்டத்தட்ட, இந்த முறை ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் எனவும், இதனால் ஊழியர்களுக்கான DA 41% ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் உள்ள 65 லட்சம் அரசு ஊழியர்களும், 48 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவார்கள் என நம்பப்படுகிறது. அரசின், இது சார்ந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நம்பப்படுகிறது.