மடியிலேயே என் மகள் உயிர் போயிடுச்சு., விஜய்க்கு இன்னும் அந்த feel இருக்கு! கதறிய எஸ் ஏ சந்திரசேகர்!!

0
மடியிலேயே என் மகள் உயிர் போயிடுச்சு., விஜய்க்கு இன்னும் அந்த feel இருக்கு! கதறிய எஸ் ஏ சந்திரசேகர்!!
மடியிலேயே என் மகள் உயிர் போயிடுச்சு., விஜய்க்கு இன்னும் அந்த feel இருக்கு! கதறிய எஸ் ஏ சந்திரசேகர்!!

இறந்த தனது மகள் குறித்த கடைசி தருணங்களை, எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் அவர் மனைவி சோபா ஆகியோர் ஒரு பேட்டியில் உருக்கத்துடன் தெரிவித்துள்ளனர்.

பெற்றோர் உருக்கம்:

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரும், விஜய்யின் தந்தையுமான எஸ் ஏ சந்திரசேகர் சமீபகாலமாக பேட்டிகளில் பங்கேற்று தங்கள் குடும்பம் குறித்து பேசி வருகிறார். அந்த வகையில் தன் மனைவி ஷோபாவுடன், பேட்டி ஒன்றில் இறந்து போன தனது மகள் குறித்து சோகமான தருணங்களை, உருக்கத்துடன் பேசியுள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது, தனது மகளுக்கு நோய் இருப்பது தெரிந்து, மிகவும் கவனத்துடன் பார்த்து வந்தோம். ஏவிஎம் உள்ளிட்ட எந்த இடத்துக்கு ஷூட்டிங் சென்றாலும், மகளையும் உடன் அழைத்துக் கொண்டு சென்று விடுவேன். ஒரு நாள் நான் ஷூட்டிங் கிளம்பும்போது, திடீரென என் கையைப் பிடித்துக் கொண்டு அப்பா என் கூடவே இருங்க என அழுதாள்.

அப்படியே கொஞ்ச நேரத்தில் வாயிலிருந்து ரத்தம் வழிய ஆரம்பித்து விட்டது. நாங்களும் அவளை தூக்கிக்கொண்டு எங்கெங்கெல்லாம் ஓடினோம். இருந்தாலும் கடைசி நேரத்தில் என் மடியிலேயே, மகளின் உயிர் பிரிந்து விட்டது. விஜய்க்கு தங்கையை பிரிந்த அந்த ஏக்கம் இன்னமும் இருக்கிறது. இதை மட்டும் எங்களால் வாழ்க்கையில் மறக்கவே முடியாது என இருவரும் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here