வருமான வரி கணக்கு பான் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் விரைந்து இதனை முடிக்க வேண்டும் என, மத்திய நேரடி வரிகள் வாரியம் வலியுறுத்தியுள்ளது.
அதிரடி அறிவிப்பு:
நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும், தனித்துவமிக்க 12 இலக்க ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் எண்ணை வங்கி கணக்கு, கேஸ் இணைப்பு, மொபைல், மின் இணைப்பு உள்ளிட்ட பலவற்றுடன் இணைக்க வேண்டும் என அரசு ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது. அந்த வகையில், வருமான வரி கணக்கு அட்டையான பான் கார்டுடன் இந்த ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதற்கான காலக்கெடு ரூபாய் 1,000 அபராதத்துடன், வரும் 2023 மார்ச் 31 க்குள் முடிவடைய உள்ளது. இல்லையெனில் பான் கார்டு செல்லாததாக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்த இணைப்பின் மூலம், போலி பான் கார்டுகளை கண்டறிய அரசு திட்டம் போட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த இணைப்பை செய்து விட்டோமா? என ஒரு சிலருக்கு சந்தேகம் ஏற்படலாம்.
அதை நிவர்த்தி செய்ய, நீங்கள் incometax.gov.in என்ற இணையதளம் சென்று ” லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ் ” என்பதை கிளிக் செய்யவும். அதன் பிறகு “வியூ லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ்” என்பதை கிளிக் செய்தால், உங்களுக்கு இந்த இணைப்பு செய்யப்பட்டு விட்டதா? என்பதற்கான உறுதி கிடைத்துவிடும். அப்படி இணைக்கவில்லை என்றால் உடனடியாக இதனை செய்து முடித்து விடுங்கள்.