சூரிய மண்டலத்தில் நுழையும் பனிப்பாறை தற்போது பூமிக்கு அருகில் கடந்து செல்கிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இதன் அளவு 900 அடி என கூறுகின்றனர்.சிகாகோ பல்கலைக்கழகத்தின் வானியலாளர்கள் இந்த பாறை பற்றி ஆராய்ச்சி செய்து இது ஒமூவாமூவா பனிப்பாறையாக இருக்கலாம் என கூறி வருகின்றனர்
சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி
யேல் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகத்தின் வானியலாளர்கள் இந்த பாறையில் ஹைட்ரஜன் வாயு கலந்து இருப்பதாக தெரிவிக்கின்றனர்,பூமியின் சூரிய மண்டலத்தை கடந்து செல்லும் முதல் விண் பொருளான ஓமுவாமுவா இதற்கு பல் பெயர்கள் வைத்து அழைக்கப்படுகிறது அது என்னவென்றால் ஒரு வால்மீன், ஒரு சிறுகோள், சுருட்டு வடிவ விண்கலம் என குறிப்பிடப்படுகிறது.
ஒமுவாமுவா பனிப்பாறை
ஒமுவாமுவா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பனிப்பாறையில் ஹைட்ரஜன் வாயு நிரம்பியிருப்பதாகக் கூறியுள்ள ஆய்வாளர்கள், இயற்கையில் இது மிகவும் அரிதான ஒன்று என்று குறிப்பிட்டுள்ளனர்.கடந்த 2017ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒமூவாமூவா பனிப்பாறை தற்போது சூரிய மண்டலத்திற்குள் நுழைந்துள்ளதாகவும், இதுபோன்ற ஹைட்ரஜன் பனிப்பாறை சூரிய மண்டலத்திற்குள் வருவது இதுவே முதன்முறை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.தற்போது சனிக்கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் உள்ள பனிப்பாறை அதனைக் கடந்து செல்ல 10 ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்றும் கூறியுள்ளனர். பனிப்பாறையின் கிராபிக்ஸ் படத்தையும் நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |