இந்தியாவில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இதுவரை நாட்டில் மொத்தமாக 8 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குரங்கு அம்மை நோய்:
உலகில் கொரோனா தந்த பேரழிவை தொடர்ந்து தற்போது குரங்கு அம்மை நோய் வீரியம் எடுக்க தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோய் 55 நாடுகளில் மிக தீவிரமாக பரவி வருகிறது. அதில் குறிப்பாக ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்தபடி இருக்கிறது. தற்போது இந்தியாவிலும் இந்நோய் தீவிரமடைவது குறிப்பிடத்தக்கது.
முதன் முதலில் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளா வந்த ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. மேலும் கேரளாவில் 3 பேருக்கும் மற்றும் டெல்லியில் 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் இந்தியாவில் புதிதாக இரண்டு நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்தியாவில் ஒட்டு மொத்தமாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை 8 பேராக உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவில் நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்