இனி நள்ளிரவு வரை இந்த கடைகள் இயங்க வேண்டும் – அரசு முக்கிய அறிவிப்பு!

0
இனி நள்ளிரவு வரை இந்த கடைகள் இயங்க வேண்டும் - அரசு முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் வாடிக்கையாளர்கள் கேட்டு கொண்டபடி கூட்டுறவு மருந்தகம், பல்பொருள் அங்காடிகளை, இரவில் கூடுதல் நேரம் திறக்க கூட்டுறவுத் துறை முடிவெடுத்துள்ளது.

நள்ளிரவிலும் கடை இயங்கும்:

தமிழகத்தில் அதிகமான தனியார் நிறுவனங்களின் மருந்தகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் செயல்பட்டுவருகிறது. இதனை தொடர்ந்து சில தனியார் கூட்டுறவு சங்கங்கள் பல பெயர்களில் மருந்தகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளை நடத்தி வருகின்றன. அது போலவே சென்னையில் சங்கங்கள் இயங்கி வரும் அங்காடிகள், மருந்தகங்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையும் மற்றும் மற்ற மாவட்டங்களில் இரவு 8 மணி வரையும் இயங்குகிறது. மேலும் கூட்டுறவு மருந்தகங்களில், 20 % தள்ளுபடி வழங்கப்படுவதால் பெரும்பாலும் மக்கள் மருந்து மாத்திரை இங்கு வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கூட்டுறவுத் துறை அதிகாரி வெளியிட்ட தகவலின்படி, வாடிக்கையாளர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு கூட்டுறவு மருந்தகம், பல்பொருள் அங்காடிகளையும் இரவில் கூடுதல் நேரம் திறந்து வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னையில் உள்ள கூட்டுறவு மருந்தகம், பல்பொருள் அங்காடிகளையும் இரவில் 10 அல்லது 11 மணி வரை திறந்து வைக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அதிகமான வேலை நேரம் வருவதால் ஒருநாளில் இரண்டு ஷிப்ட்களாக இரண்டு நபர்களை வேலைக்கு வைப்பதாக கூட்டுறவுத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here