இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசு, கண்மூடித்தனமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என உலக சுகாதார அமைப்பின் அதிகாரி ரோட்ரிகோ ஆப்ரின் அறிவுரை வழங்கியுள்ளார்.
கட்டுப்பாடுகள் வேண்டாம்:
இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிறது. பல மாநிலங்களில், இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாட்டின் போது, வெளியே வரும் மக்கள் மீது தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் வாயிலாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், வாகனங்களில் வெளியே தேவையில்லாமல் சுற்றி திரியும் நபர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் அதிகாரி, முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு, அரசு கண்மூடித்தனமான கட்டுப்பாடுகளை விதிக்க கூடாது எனவும், மக்களை துன்பத்திற்கு ஆளாக்க கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார். தற்போது, இந்த செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்