நடிகை பாவனா 5 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் சீண்டலுக்கு ஆளானார். இதில் முக்கிய குற்றவாளியாக சிக்கியுள்ள நடிகர் திலீப்பின் முன் ஜாமீன் மனுவை கேரளா நீதி மன்றம் மூன்றாவது முறையாக ஒத்தி வைத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை கடத்தல் வழக்கு:
2017 ஆம் ஆண்டு கேரளாவில் நடிகை பாவனாவை கடத்தி பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கிய குற்றத்துக்காக 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த குற்றத்தில் மலையாள நடிகரான திலீப்புக்கு தொடர்பு உள்ளதாக இவரும் கைது செய்யப்பட்டார். அதற்கு பிறகு திலீப்குமார் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். ஆனாலும் இந்த வழக்கு தொடர்ந்து 5 ஆண்டுகளாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த வழக்குக்கு ஏதுவாக நடிகை பாவனா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் நடிகர் திலீப் குமார் மீண்டும் கைது செய்ய இருப்பதாக காவல் துறையிடம் இருந்து தகவல் வந்த நிலையில் அவர் முன்னெச்சரிக்கையாக தனக்கு முன்ஜாமீன் கேட்டு கேரள உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்தார். ஆனால் இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. அந்த வகையில் மூன்றாவது முறையாக நடிகர் திலீப்பின் முன்ஜாமீன் மனு தள்ளிப்போய் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்