சரிவடைந்த அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் தொழில் குழுவை அறிவித்துள்ளார். அதில் 6 இந்தியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பொருளாதாரம் கடும் வீழ்ச்சி..!
கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக பொருளாதாரமே மிகப்பெரிய வீழ்ச்சி கண்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான பொருளாதார புள்ளிவிவரங்களின்படி அமெரிக்காவில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் 16 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வேலை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
சரிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல்வேறு துறைகளை சேர்ந்த 200க்கும் அதிகமான தொழில் நிபுணர்கள் அடங்கிய குழுக்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
மீட்பு குழுவில் இந்தியர்கள்..!
விவசாயம், வங்கி, கட்டுமானம், பாதுகாப்பு, எரிசக்தி, நிதி சேவைகள், சுகாதாரம் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட குழுக்களை டிரம்ப் அறிவித்தார். இந்த குழுக்களில் உள்ள நிபுணர்கள் அமெரிக்க பொருளாதாரத்தை எவ்வாறு புதுப்பிப்பது என்பது குறித்த பரிந்துரைகளை டிரம்புக்கு வழங்குவார்கள்.
இதில் கூகுள் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் சி.இ.ஓ., சத்யா நாடெல்லா, ஐ.பி.எம்.,மின் அரவிந்த் கிருஷ்ணா, மைக்ரானின் சஞ்சய் மெஹ்ரோத்ரா உள்ளிட்ட 6 இந்தியர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |