பிரபல ஹோட்டலில் நடந்த மகனின் காதணி விழாவில் கணவன் பங்கேற்காததால் துக்கம் அடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாய் தற்கொலை:
தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேராசிரியையாக பணிபுரிந்து வரும் சஞ்சினிக்கும், திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த தொட்டியத்தில் மருத்துவமனை நடத்தி வரும் டாக்டர் கோகுல் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் மகன் உள்ளான். இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு முன் பிரிந்த இந்த தம்பதியினர் விவாகரத்து கேட்டு நீதிமன்றம் வரை சென்றுள்ளனர்.
இதில் தற்போது, சில நாட்களுக்கு முன் தனது மகனுக்கு நட்சத்திர ஹோட்டலில் தாய் சஞ்சினி காதணி விழா நடத்தினர். இங்கு வந்த உறவினர்கள் குழந்தையின் அப்பா ஏன் நிகழ்ச்சிக்கு வரவில்லை என கேள்வி எழுப்பினர். இதனை அடுத்து, கடும் மன உளைச்சலில் இருந்த சஞ்சினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகனுக்கு நடந்த விழா முடிந்ததும் தாய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.