மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதிய தீர்மானம்:
மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த குடியுரிமை சட்டத்தை மீண்டும் திரும்ப பெறக்கோரி மக்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்தி வந்தனர். இதை கண்டுகொள்ளாத மத்திய அரசு இந்த சட்டத்தை திரும்ப பெறும் எண்ணம் இல்லை என திட்டவட்டமாக மறுத்து விட்டது. இதனால், மக்களின் போராட்டம் மேலும் தீவிரமாகியது. கொரோனா பரவல் அதிகமானதால் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக போராட்டக்காரர்கள் அறிவித்தனர்.
இதில், தமிழக சட்டப்பேரவை சில நாட்களுக்கு முன் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக தெரிவித்தார். இதனால், அரசு சார்ந்த ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இது மட்டுமல்லாமல், சத்துணவு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்படுவதாகவும் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த நிலையில், தற்போது நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இந்த குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என முதல்வரால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இதற்கு முன் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த எதிர்ப்பு தீர்மானமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்