ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தில் பேய் கதாபாத்திரத்தில் நடித்து இருந்த அலெக்ஸாண்ட்ரா கோவா மாநிலதில் தான் தங்கியிருந்த வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.
ராகவா லாரன்சின் இயக்கத்தில் திரைக்கு வந்த வெற்றி நடை போட்ட படம் என்றால் காஞ்சனா 1. இதன் முதல் பாக வெற்றியை தொடர்ந்து தற்போது வரை 3 பாகங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இதில் காஞ்சனா 3 படத்தில் ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா ஆகியோர் நடித்திருப்பர்.
இவர்களுடன் பழி வாங்கும் பேய் கதாபாத்திரத்தில் வந்தவர் அலெக்ஸாண்ட்ரா. இவர் ரஷ்ய நாட்டை சேர்ந்தவர். இவர் கோவாவில் நார்த் கோவன் எனும் கிராமத்தில் தனது ஆண் நண்பருடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி இவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.
சில நாட்களாகவே அலெக்ஸாண்ட்ராவிற்கும் அவரது ஆண் நண்பருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் பின்னர் பிரிந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு அவர் தற்கொலை செய்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்