இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் புதிய உச்சத்தை எட்டும் கொரோனா மூன்றாம் அலை – நிபுணர்கள் எச்சரிக்கை!!

0

நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு பிரதமர் அலுவலகத்தில் மூன்றாம் அலை பரவல் குறித்து சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் மூன்றாம் அலை பரவல் வரும் அக்டோபர் மாதத்தில் உச்சம் தொடும் என கூறியுள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் கொரோனா மக்களை வாட்டி வதைத்து வருகிறது. சென்ற ஆண்டு தலைகாட்டிய கொரோனா முதல் அலை, இந்த ஆண்டு இரண்டாம் அலையாக மாறி கொத்து கொத்தாக உயிர் பலி வாங்கியது. அதோடு டெல்டா வைரஸ், டெல்டா பிளஸ் ஆக வேறு உருமாறியுள்ளது.

 

இவ்வாறு உருமாறிய டெல்டா பிளஸ் வைரஸ் ஆல் மூன்றாம் அலை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்திய அரசு மக்களை கோவிட்19 நெறிமுறைகளை பின்பற்ற தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் வி.கே.பால் தலைமையிலான நிபுணர் குழு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் மூன்றாம் அலை பரவல் வரும் அக்டோபர் மாதத்தில் உச்சம் தொடும் என அறிவித்துள்ளது. மேலும் அப்போது 100 கொரோனா நோயாளிகளுக்கு 23 பேருக்கு கட்டாயம் மருத்துவமனை சிகிச்சை தேவைப்படும் என்றும் கூறியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here