ஆப்கானிஸ்தானில், அமெரிக்க படையினருக்கும் தாலிபான்களுக்கும் இடையேயான போர் முடிவுற்ற பிறகு அந்நாட்டை முழுவதும் தாலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். மேலும் புது புது விதிகளை அந்நாட்டு மக்களுக்கு தாலிபான்கள் விதித்து வருகின்றனர்.
தற்போது தாலிபான்களின் ஆட்சி அதிகாரம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆப்கானிஸ்தானில் இருந்து பழங்கள், உலர் பழங்கள், காய்கறி சாறுகள் போன்றவை இந்தியாவிற்கு இறக்குமதி ஆகின்றன. இந்தியாவில் இருந்து ஆடைகள், மருந்து பொருட்கள் உள்ளிட்டவை ஏற்றுமதி ஆகின்றன.
இவற்றில் பெரும்பாலும் பாகிஸ்தானில் இருந்து இரண்டு முக்கிய வர்த்தக சாலை போக்குவரத்து வழிகள் மூலமே நடைபெற்று வந்தது. தற்போது தாலிபான்கள் இந்த இரண்டு வழிகளையும் அடைத்துள்ளனர். இதனால் ஏற்றுமதி, இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் உலர் பழங்கள் பெரும் அளவில் ஆப்கானிஸ்தானில் இருந்தே இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் இந்தியாவில் உலர் பழங்களின் விலை கடுமையாக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்