தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் மித்தாலி ராஜ் ஆகிய இருவர்களின் பெயர்களை இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுகளுக்காக பிசிசிஐ பரிந்துரை செய்து உள்ளது. மேலும் அர்ஜுனா விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலையும் பிசிசிஐ வெளியிட்டு உள்ளது.
நாட்டில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வருடந்தோறும் அர்ஜூனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, துரோணாச்சாரியா போன்ற விருதுகளை வழங்கி வீரர்களை மத்திய அரசு கவுரபடுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பெயர் பட்டியலை ஜூன் 21ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. கொரோனா காரணமாக அதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது அர்ஜூனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கான பெயர் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டு உள்ளது.
அதன் அடிப்படையில் பிசிசிஐ கேல் ரத்னா விருதுக்கு தமிழக வீரர் அஸ்வின் மற்றும் மித்தாலி ராஜ் ஆகியோர் பெயர்கள் பரிந்துரை செய்து உள்ளது. இதே போல் அர்ஜுனா விருதுக்கு ஷிகர் தவான், கே.எல்.ராகுல், பும்ரா உள்ளிட்டோரின் பெயர்களை பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது. இதில் ஷிகர் தவானின் பெயர் போன ஆண்டும் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அவருக்கு விருது கிடைக்காத நிலையில் மீண்டும் இந்த ஆண்டு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் கேல் ரத்னா விருது கடந்த ஆண்டு தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு உட்பட 5 வீரர்களுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்