மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக உயர்த்த உள்ளதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதனை தொடர்ந்து மீண்டும் ஜனவரி மாதத்தில் அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டும் பட்சத்தில், 8 வது ஊதியக் குழுவை மத்திய அரசு அமல்படுத்தும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இது தொடர்பாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறுகையில், “தற்போது 8 வது ஊதியக்குழுவை பரிசீலிக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை. எனவே 7வது ஊதியக்குழு கீழ் உள்ள பணியாளர்களுக்கு பெர்ஃபார்மன்ஸ் அடிப்படையில் ஊதிய உயர்வை வழங்கப்படலாம்.” என குறிப்பிட்டுள்ளார்.