தமிழக மக்களே.., புதிதாக 2 லட்சம் ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடக்கம்!!

0
தமிழக மக்களே.., புதிதாக 2 லட்சம் ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடக்கம்!!
நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல சலுகைகளையும், நலத்திட்ட உதவிகளையும் மத்திய மாநில அரசுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் மத்திய அரசு அந்த்யோதயா ரேஷன் கார்டு வழங்கியுள்ளது. இந்நிலையில் புதிய ரேஷன் கார்டு தொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் துறை ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இன்று முதல் புதிதாக 2 லட்சம் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கி விட்டதாக அறிவித்துள்ளது. ரேஷன் அட்டை மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை பெற அத்தியாவசிய சான்றாக உள்ளது. கடந்தாண்டு ஜூலை மாதம் முதல் புதிய குடும்ப அட்டை வழங்குவது நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here