தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் அறிமுகப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழக அரசு பள்ளிகளில் படித்து விட்டு கல்லூரிகளுக்கு வரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் ரூ.1000 எதற்காக வழங்கப்படுகிறது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதாவது ஒரு காலகட்டத்தில் பெண்கள் படிப்பதே மிகவும் அரிதாக இருந்தது. ஆனால் இன்று அவர்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர். இது போன்று மேலும் சாதிக்க வேண்டும் என்பதற்காக மேல்நிலைப் படிப்பை முடித்துவிட்டு உயர்கல்விக்கு வரும் மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது என விளக்கம் அளித்துள்ளார்.