வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இது தவிர வீடுகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் பலவும் சேதம் அடைந்துள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்நிலையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது மட்டுமல்லாமல் இமாச்சல பிரதேச மாநிலத்தை இயற்கை பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவித்துள்ளனர். இதனால் பல்வேறு மாநிலங்களும் தற்போது ஜம்மு காஷ்மீருக்கு நிதியுதவி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழக முதல்வர் ஜம்பு காஷ்மீர் நிவாரண பணிக்காக தமிழக அரசு சார்பில் ரூபாய் 10 கோடி நிதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இந்த கோயில்களின் பெயரில் 87 போலி இணையதளங்கள்., ஐகோர்ட்டில் அரசு பரபரப்பு பதில்!!!