நாட்டில் கொரோனா தொற்றை ஒழிக்க Zydus Cadila நிறுவனத்தின் ஊசியில்லா கொரோனா தடுப்பு மருந்து Zycov-d தடுப்பு மருந்து அடுத்த மாதம் முதல் வாரம் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
உலக அளவில் பெரும் அச்சுறுத்தல்களை உருவாக்கி வரும் கொரோனா தொற்றில் இருந்து மனித குலம் தங்களை காப்பாற்றிக்கொள்ள தடுப்பூசியே தீர்வாக உள்ளது. ஏனேனில் தற்போது வரை இதற்கு மருந்து கண்டுபிடிக்கபடவில்லை. இதனால் பல உலக நாடுகள் தடுப்பூசியில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் Zydus Cadila நிறுவனத்தின் ஊசியில்லா கொரோனா தடுப்பு மருந்து அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இதன் பெயர் zycov-d என்று கூறப்படுகிறது. அந்நிறுவனத்தின் இயக்குனர் இந்தியாவில் மாதத்திற்கு 4 கோடி முதல் 5 கோடி வரை தடுப்பு மருந்துகள் விநியோகிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அவசர கால பயன்பாட்டிற்கு இந்த தடுப்பு மருந்திற்கு அனுமதி வழங்கி உள்ளது. மேலும் இது உலகின் முதலாவது ஊசியில்லா பிளாஸ்மா தடுப்பு மருந்து மற்றும் இந்த தடுப்பூசி 12 முதல் 18 வயதுடைய மக்களுக்கு வழங்கப்பட உள்ள முதல் தடுப்பு மருந்து என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்