மத்திய பிரதேச மாநிலம் பகாரியா ரயில்வே ஸ்டேஷனில் 30 வயது மிக்க ஒரு பெண் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த நிலையில் கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு ஆட்கள் வரிசையாக நின்று கொண்டிருந்ததால் அடுத்த ரயிலுக்கு சென்று கழிவறையை பயன்படுத்த சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து கமலேஷ் குஷ்வாகா (22)என்பவர் சென்று அந்த பெண்ணை தாக்கி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து ரயில் கிளம்பிய நிலையில் கிட்டத்தட்ட 40 கிலோ மீட்டர் தொலைவிற்குள் ஓடும் ரயிலிலேயே அந்த பெண்ணை 3 முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை தொடர்ந்து சாத்னா ரயில் நிலையத்திற்குள் ரயில் வந்ததும்,அந்த நபரிடம் தப்பித்து அரைகுறை ஆடையுடன் ரயில்வே போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து அந்த நபர் ரயில் கழிப்பறைக்குள் சென்று கதவை பூட்டினார். அதன் பின்னர் போலீஸ் கதவை உடைத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.
Enewz Tamil WhatsApp Channel
TNTET தேர்வர்கள் கவனத்திற்கு.., தேர்வில் பாஸாக இத மட்டும் பண்ணுங்க.., வெளியான முக்கிய அறிவிப்பு!!