மாநிலத்தின், இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் இன்று முதல் வரும் ஜனவரி 14-ஆம் தேதி வரை மூடப்படுவதாக உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது.
வெளியான அறிவிப்பு:
தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைகள் முடிந்து, திங்கட்கிழமை அதாவது ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் பெரும்பாலான வட மாநிலங்களில், மோசமான பனிப்பொழிவு நிலவி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலத்தில், மெயின் புரி மாவட்டத்தில் உள்ள 8ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு, டிசம்பர் 31ஆம் தேதியான இன்று முதல் வருகிற ஜனவரி 14-ஆம் தேதி வரை குளிர்கால விடுமுறை அளிக்கப்படுவதாக, கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழக செவிலியர்களுக்கு ஷாக் நியூஸ்.., உங்களுக்கு பணி நிரந்தரம் இல்லையா.., அரசு முடிவு!!
இந்த தொடர் விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டாலும், இந்த குளிர் காலத்திற்கென ஒதுக்கப்பட்ட நேர அடிப்படையில் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டாலும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு எந்த விடுமுறையும் இல்லை என கல்வித்துறை தெளிவுபடுத்தி உள்ளது.
Uttar Pradesh | Mainpuri Basic Education Department has declared holiday in schools till class 8 from December 31, 2022 to January 14, 2023 pic.twitter.com/K5pLLiiQ6f
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) December 30, 2022